தந்திர பூசை முறைகள் மிகவும் வலிமை வாய்ந்தவைகள். குருவின் மேற்பார்வையில் தான் அவைகளை செய்ய வேண்டும். குரு உபதேசம் இல்லாமலோ அல்லது தவறாக செய்தாலோ மிக பயங்கர பின் விளைவுகள் வரும். தந்திர பூசை முறைகளில் 100 க்கும் மேற்ப்பட்ட பூசை முறைகள் உள்ளது. அதில் சிறப்பு பெற்றது இந்த தசமகா வித்தை எனப்படும் பத்து தேவிகளின் ”தோடலா தந்திர” பூசைகள்தான். அதில் எவ்வளவு நுணுக்கங்களும், சூட்சமங்களும் உள்ளது என ஒரே ஒரு தேவியின் யந்திரமான “ஸ்ரீ சக்கரம்” பற்றி பார்க்கலாம். இந்த ஸ்ரீ சக்கரம் பூசை மட்டுமே “ஸ்ரீவித்தை” என சொல்லப் படுகிறது.

சிவபெருமான் இவ்வுலகிற்க்கு 64 யந்திரங்களும், அதற்குரிய மந்திரங்களையும் அருளினார். அதில் மிக முக்கியமானது இந்த ஸ்ரீ யந்திரம். இதற்கு மொத்த 64 யந்திரங்களின் வலிமையும் உள்ளதென்பதும் ஒரு கருத்து. முதன் முதலில் இறையாற்றல் வெட்டவெளியாக இருந்து இரண்டாக பிரிந்த போது அதுதான் (பெண் Total Cosmic Female Force it now called "Anti Matter") அவரது மனைவி பராசக்திக்கு இந்த யந்திரத்தையும், மந்திரத்தையும் கொடுதார். அதன் பிறகு தனது உடலின் இடது பகுதியில் இருந்து “சிவன் என்னும் அலையதிர்வையும்” வலது பகுதியில் இருந்து இந்த் பிரபஞ்சத்தை காக்க்கும் சக்தியான “விஷ்ணு என்னும் அலையதிர்வையும்” மத்திய பகுதியில் இருந்து “பிரம்மா என்ற அலையதிர்வையும்” உருவாக்கினார்.

அந்த பிரமாண்டமான ஆற்றலையும், அலையதிர்வுகளையும், வான்காந்த்தையும் இன்றும் நம்மாலால் முழுமையாக உணர முடியவில்லை அந்த பராசக்தி என்ற “Anti Matter - ஆன்டை மேட்டர் - எதிர் பொருள்” சில கிராம் எடை பல இன்றய அணு குண்டுகளின் சக்திக்கு சமம்.

இந்த ஸ்ரீ சக்கரம் பல அலையதிர்வுகள் எனப்படும் தேவதைகளை உள்ளடக்கியது. அதனால்தான் தோடலா தந்திர புத்தகத்தில் முதல் வரியே “உங்களின் தலையை கொடுக்கலாம், உயிரை கூட கொடுக்கலாம் ஆனால் இந்த “சோடஷி எனற திரிபுர சுந்தரியின்” மந்திரத்தை மட்டும் கொடுக்க கூடாது” என சொல்லப்பட்டு இருக்கிறது. இங்கு கொடுத்து இருப்பது மூல மந்திரம் மட்டுமே. சிலர் பல புத்தகங்களில், வலைப்பூக்களில் வெளியிட்டு இருக்கிறார்களே என நினைக்கலாம். ஆனால் “இந்த மந்திரம் தெரிந்தவர்கள் பதிப்பிக்க மாட்டார்கள், அப்படி பதிப்பித்தவர்கள் மந்திரத்தை முழுமையாக தெரிந்து கொள்ளாதவர்கள்” இந்த மூல மந்திரத்தை சொல்வதோ ஜபிப்பதோ பலனளிக்காது, இப்படியும் சில சூட்சமங்கள் இருக்கிறது என தெரிவிக்கவே இந்த பதிவு.

முதலில் இந்த யந்திரம் என்ன? எப்படி நிர்மாணிக்கப்பட்டது? இதன் தத்துவ அமைப்புகள் என்ன என பார்ப்போம். இதில் மொத்தம் 9 ஆவாரணங்கள் அவை தேவிகளையும், அவர்களின் குணங்களையும், முக்கியத்துவத்தையும் குறிக்கும்,





நடுவில் 5 கீழ் நோக்கிய தேவியின் முக்கோணங்கள் (நடுவில் இருக்கும் சிறிய முக்கோணத்தையும் சேர்த்து), 4 மேல் நோக்கிய சிவனின் முக்கோணங்களுடன் இணைந்து மொத்தம் 43 முக்கோணங்கள். இந்த 5 தேவியின் முக்கோணங்களில் இருந்து தான் இந்த பிரபஞ்ச தோற்றம் தோன்றியது. 4 சிவனின் அக்னி பிழம்பு போன்ற முக்கோணத்தினால் அவைகள் அழிக்கப்பட்டு மாற்று ஆற்றலாக மாற்றப்படுகின்றன. இந்த சிவ சகதியின் கூடலில் தான் பொருட்களும், உயிர்களும் தோன்றின. இந்த ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் இருக்கும் புள்ளிதான் “பிந்து” எனப்படும்.

இந்த பிந்துதான் “காமக்கலை” என கூறப்படுகிறது. அதனுள் மூன்று புள்ளிகள் உள்ளது ஒரு சிவப்பு புள்ளி அதன் பெயர் “க்ருகுலா”இது பெண் தன்மையுடையது. இரண்டாவது வெள்ளை புள்ளி அதன் பெயர் “வராஹி” (இது நாம் கோவிலில் பார்க்கும் வாராஹி அல்ல இது வராஹி) ஆண் தன்மை உடையது. இரண்டும் கலந்த கலவையாக மூன்றாவது புள்ளி அது சிவசக்தியின் கூடல். ஒவ்வொரு மனிதனிடமும் ஸ்ரீ யந்திரத்தின் தன்மையும் ஆற்றலும் இயறகையாகவே உள்ளது. வராஹீ என்ற தந்தையிடம் இருந்து நான்கு த்த்துவங்களும், க்ருகுலா என்ற தாயிடம் இருந்து ஐந்து த்த்துவங்களும் ஒரு கரு உருவாக தேவைப்படும். இவைகள் தான் மனித உடலின் ஒன்பது த்த்துவங்கள்.

வராஹியின் நான்கு நெருப்பு பிழம்புகளும் மும்மடங்காகி (4X3=12) 12 சூரிய கலைகளாகி இன்று நாம் சொல்லும் 12 ராசி வீடுகளாகின (மேஷம், ரிஷபம்...மீனம்). க்ருகுலாவின் 5 முக்கோணங்களும் முமடங்காகி (5X3=15) சந்திர கலைகளாகி, அந்த கலைகளே இன்று திதிகள் (பிரதமை, துவிதியை...பௌர்ணமி அல்லது அமாவாசை) எனப்படுகிறது. இந்த ஒன்பது முக்கோணங்கள் அல்லது தத்துவங்கள் ஒன்பது படிகள் ஒரு கருவின் வளர்ச்சியின் அடிப்படைக் காரணங்கள்.

இந்த 5 பெண் முக்கோணங்களும் 4 ஆண் முக்கோணங்களும் ஆறு இடங்களில் இணையும் இடங்கள்தான் முதல் 6 ஆவாரணங்கள். அடுத்து இந்த 43 மூக்கோணங்களை சுற்றி 8 இதழ்கள் கொண்ட வட்டமும், அதை சுற்றி வெளிவட்டத்தில் 16 இதழ்கள் கொண்ட மற்றோரு வட்டம் இவைகள் இரண்டும் 7ஆவது 8 ஆவது ஆவராணம். அதற்கு வெளியில் காம்பௌண்ட் போல் மூன்று கோடுகளும் சேர்த்து கடைசியான 9 ஆவது ஆவாரணம்.

இந்த ஸ்ரீ சக்கரம் என்ற பரிவாரத்திற்கு 108 தேவிகள். இவைகளுக்கு பிரதானமான தேவிதான் “லலித திரிபுர சுந்தரி” இந்த தேவியின் ஏறக்குறைய மறு உருவம் தான் காஞ்சி காமாட்சி. திரிபுரம் என்பது மூன்று உலகம், சுவர்கம், பூமி, நரகம் அல்லது வானுலகம், பூமி, பாதாளம் அல்லது Macrocosm (include all galaxies ), Earth, Microcosm (include all fundamental particles). இவளே திரிதோஷமான முக்குணங்களுக்கு தேவி வாதம், பித்தம், சிலேத்துமம். இவளே ராஜச, தாமஸ, சாத்த்வீக குணங்களுக்கும் அரசி. அதே போல் இச்சை, ஞானம், கிரியா (செயல்) மேலும் இவளின் 5 முக்கோணங்கள் தான் பஞ்ச பூதங்கள். 


இந்த ஸ்ரீ சக்கரத்தின் நான்கு மூலைகளையும் காவல் காப்பவர்கள். சூரியன், விஷ்ணு, சிவன், வினாயகர் 


இதன் எட்டு திக்பாலகர்கள் 

இது இல்லாமல் பிந்துவில் இருந்து முதல் எட்டு ஆவராணஙகளையும் ஒரு ஆவரணத்திற்கு எட்டு பைரவர்களும், அவர்களின் பைரவிகளும் ஆக மொத்தம் 64 பைரவர்கள்+64 பைரவிகள காவல். ஒவ்வொரு ஒரு பைரவருக்கும் ஒரு கோடி யோகினிகள் பணியாட்கள். ஆக மொத்தம் 64 கோடி யோகினிகள். இவர்கள்தான் லலித சஹர்ஸநாமத்தில் சொல்லப்படும் யோகினிகள்.



வெளிப்புற கோட்டுக்கு பாதுகாப்புக்கு 10 ”சித்தி” தேவிகள் இவர்கள் உருகிய பொன் போன்றவர்கள். (May be Plasma ?)

O1. அனிமா சித்தி
O2. லகிமா சித்தி
O3. மகிமா சித்தி
O4. இஷ்விதா சித்தி
O5. வசித்துவ சித்தி
O6. பிரகாம்ய சித்தி
O7. புத்தி சித்தி
O8. இச்சா சித்தி
O9. பிராப்தி சித்தி
10. சர்வகாம சித்தி

நடு கோட்டுக்கு காவலிருப்பவர்கள்

M1- ஸ்ரீ பிராமி மாத்ருகா
M2- ஸ்ரீ மகேஷ்வரி மாத்ருகா
M3- ஸ்ரீ கௌமாரி மாத்ருகா
M4- ஸ்ரீ வைஷ்ணவி மாத்ருகா
M5- ஸ்ரீ வாராகி மாத்ருகா
M6- ஸ்ரீ மஹேந்திரி மாத்ருகா
M7- ஸ்ரீ சாமுண்டா மாத்ருகா
M8- ஸ்ரீ மகாலக்ஷ்மி மாத்ருகா

உட்புற கோடு முத்திரை சக்தியால் காக்கப்படுகிறது இவர்கள் சிகப்பு நிறம்.

01- சர்வ சங்கோஷொபினி தேவி
02- சர்வ வித்ராவினி தேவி
03- சர்வ கர்ஷினி தேவிi
04- சர்வ வஷ்ங்கரி தேவி
05- சர்வோமதினி தேவி
06- சர்வ மஹன்குஷா தேவி
07- சர்வ கேசரி தேவி
08- சர்வ பீஜா தேவி
09- சர்வ யோனி தேவி
10- சர்வ திர்கண்டா தேவி

தொடரும் ...

வாழ்க வளமுடன்

Posted by ஹைஷ்126 Monday, December 7, 2009 1 comments




மகம் நட்சத்திரத்தில் ருதுவான பெண் பிறந்த வீட்டில் தொடக்க காலத்தில் இருந்தே பலவிதமான சங்கடங்களுக்கு இலக்காக நேரிடும். இவள் உடல் திடமும், கண்ணியமும், மரியாதையும், மன உறுதியும், தாராள குணமும் படைத்தவளாக இருப்பாள். யாருக்கும் அஞ்ச மாட்டாள். இவளுக்கு சிறிது காலம் கழித்தே திருமணம் நடைபெறும். வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் கஷ்ட நஷ்டங்களையும் அடைய கூடியவளும் ஆவாள்.

Posted by ஹைஷ்126 0 comments

இச்சை எழும் போதே காரணம் கண்டிடு
இச்சை முடிந்திடச் சூழ்நிலை பார்த்திடு.

Posted by ஹைஷ்126 0 comments




பிறந்த குழந்தைகளை நமக்கு அறிமுகமில்லாத பிறர் அடிக்கடி பார்க்க, தொட்டு தூக்க அனுமதிக்க கூடாது. குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை திருஷ்டி தோஷம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

பெண்களுக்கு யார் வீட்டுக் குழந்தையாக இருந்தாலும் தூக்கி கொஞ்ச வேண்டும் என்ற ஆவல் உண்டாவது இயறகை. அன்புணர்வும், பரிசுத்த உள்ளமும் கொண்ட பெண்கள் பார்வையில் சிசுக்கள் படும் போது அவர்களுக்கு தோஷம் ஏறபடுவதில்லை. ஆனால் மனதளவில் மாசும், பொறாமை உணர்வும் கொண்ட பெண்கள் சிசுக்களைப் பார்க்கும் போது கண் திருஷ்டி தோஷம் ஏறபட வழிகளுண்டு. அதற்கான காரணங்கள் எல்லாம் நீங்கள் அனைவரும் அறிந்ததே.

தோஷ அறிகுறிகளும் பரிகாரமும்

முதல் மாதம்

குழந்தை உறக்கத்தில் திடீர் என்று விழித்துக் கொண்டு கைகாலகளை உதறி அலறி அழும். காரணம் இல்லாமல் முக்கி முனகிக் கொண்டிருக்கும். இயல்புக்கு மாறாக கண்களை உருட்டி உருட்டி பார்க்கும்.

பரிகாரம்: குழந்தையை நடுவீட்டில் படுக்க வைத்து அதை சுற்றிலும் மஞ்சள் நீரை தெளிக்க வேண்டும், பின் அடுப்பில் எரியும் கொள்ளிக்கட்டையை ( வேறு குச்சி போன்று கொளுத்திக் கொள்ளலாம்) கொண்டு வந்து நடு தெருவில் சூரியனை நோக்கி காட்டி விட்டு மஞ்சள் நீரில் அதை அணைத்து விட வேண்டும் பின் அந்த கரியை இழைத்து குழந்தையின் நெற்றியிலும் கன்னத்திலும் பொட்டிட வேண்டும்.

இரண்டாம் மாதம்

உடம்பை முறுக்கிக் கொண்டு அழும். புகட்டிய பாலை தயிர் போல கக்கும். வீறிட்டு அழும். குழந்தையை கையில் எடுத்தால் அழுகையை நிறுத்திவிடும்.

அந்தி நேரத்தில் குழந்தையை தாயின் மடியில் இருத்தி, நடுவீட்டில் கிழக்கு முகமாக அமர செய்ய வேண்டும். தாய்க்கு எதிரே இரண்டு குத்து விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். குத்து விளக்குகளுக்கு நடுவில் ஒரு தாம்பாள தட்டில் மஞ்சள் நீரை கரைத்து வைக்கவும். தாயின் முன்னே மஞ்சள் தூளை தண்ணீர் தெளித்து பிசைந்து பிள்ளையார் பிடித்து வைக்கவும். பிள்ளையாருக்கு அருகம் புல் சார்த்தவும். பின்பு பிள்ளையாருக்கு கற்பூரம் காட்டி அருகம் புல்லினால் தட்டில் உள்ள மஞ்சள் நீரை தொட்டு தாய்க்கும் குழந்தைக்கும் தெளிக்கவும். தாயும் சேயும் உடனே எழுந்து வேறு இடத்தில் அமர வேண்டும். பின் மஞ்சள் பிள்ளையாரையும் தட்டில் கரைத்து தெருவில் ஊற்றி விட வேண்டும்.

மூன்றாம் மாதத்திற்கு மேல் நான்கு காய்ந்த மிளகாய், அத்துடன் கல்லுப்பு சேர்த்து வலது கையில் எடுத்துக் கொண்டு தாய்க்கும் குழந்தைக்கும் தலையில் இருந்து கால் வரை உடல் முழுவதும் முன்னும் பின்னும் தடவிய பின் முதலில் வலது பின் இடது பக்கமாக தலையை மூன்று சுற்று சுற்றி, மிளகாய்+உப்பு இரண்டையும் அடுப்பில் போட வேண்டும் அல்லது வீட்டு தோட்டத்திலே ஏதாவது ஒரு மூலையில் தீ இட்டு அதில் போடவேண்டும்.



வேறு முறை: 17 வயது வரை எல்லா தோஷங்களுக்கும் இது மிகசிறந்த பலன் தரும். உச்சி வேளையில் ஒரு புதிய, சிறிய மண் பாத்திரத்தில் பாதிக்கப் பட்டவரின் கைகளால் ஒரு பிடி அரிசியை அதில் இட்டு பொங்கலிட வேண்டும். அதன் பின் அதில் கோலம் போட பயன் படுத்தும் கலர்களில் ஐந்து நிற பொடியை அதில் போட்டு கலக்கினால் அது “பஞ்ச வர்ண பொங்கலாகும்” அதில் ஒரு பிடி எடுத்து வலது, இடது பக்கமாக பாதிக்க பட்டவரின் தலையை சுற்றி விட்டு, சுற்றுபவர் தன் தலையையும் அதே போல் சுற்றிக் கொள்ள வேண்டும். பின் அதை அந்த மண் பாண்டத்திலேயே போட்டு விட வேண்டும். அந்த மண் பாண்டத்தை எடுத்து சென்று ”நாயுறுவி” செடியின் அருகில் போட்டு உடைத்து விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விட வேண்டும்.









Posted by ஹைஷ்126 Sunday, December 6, 2009 3 comments



ஆயில்யம் நட்சத்திரத்தில் ருதுவான பலன்: இந்த பெண் உள்ளத்தில் சிறந்த குணங்களை பெற்று இருந்தாலும், வெளிப்படையான பேச்சு, செயற்பாடு காரணமாக எளிதாக மற்றவருடைய விரோதத்தை சம்பாதித்துக் கொள்வாள். இவளுக்கு சீக்கிரமாகவே திருமணம் ஆகும். கணவரிடன் உள்ளுற அன்பும் பாசமும் இருந்தாலும் அவளுடைய படபடப்பான உரையாடல் காரணமாக கணவருடைய கோபத்திற்க்கு இலக்காவாள். உண்மையிலேயே சிறந்த குணம் படைத்த இவள் சற்று நிதானமாகவும், அடக்கமாகவும் பேசி செயல்பட்டால் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்க முடியும்.

Posted by ஹைஷ்126 0 comments

வேண்டியதற்கு படிகட்டி, வேண்டாததை வடிகட்டும் எண்ணமே உள்மன் அமைதிக்கு உரம்.

Posted by ஹைஷ்126 2 comments




கர்பிணி பெண்களுக்கும், அடிக்கடி கருச்சிதைவு ஆகும் பெண்களுக்கும் கர்ப தோஷ, திருஷ்டி தோஷ நிவர்த்திக்கு இந்த யந்திரத்தை பிரயோகப் படுத்தலாம். இந்த யந்திரத்திற்கு பெயர் சாமுண்டி யந்திரம். இந்த யந்திரத்தை மெல்லிய காரீயத் தகட்டில் எழுத வேண்டும்.




பின்பு அதை ஒரு தாம்பாள தட்டில் வைத்து நீரால் அபிஷேகம் செய்த பின், அதற்கு மஞ்சள் குங்குமம் பூசி சுடுகாடு செல்லும் பாதையிலுள்ள குளக்கரையிலோ, ஆற்றங்கரையிலோ, கிணற்றின் அருகிலோ குழி தோண்டி புதைத்து விட வேண்டும். அந்த இடத்தில் ஒரு அகல் விளக்கு வைத்து வேப்பெண்ணை விட்டு விளக்கேற்ற வேண்டும்.

பரிகாரம் செய்ய வேண்டியவரை விளக்கை பார்க்கும் வண்ணம் வடக்கு நோக்கி நிற்க செய்து விளக்கின் எதிரே அவல், பொரி, கடலை, எலுமிச்சம் பழம், தேங்காய் வைத்து தூப தீபம் காண்பித்து அந்த பெண்ணை வணங்கச் செய்ய வேண்டும்.

அந்த பெண்ணின் கையால் அரளி பூவை சார்த்தி பிறகு கீழ் கண்ட மந்திரத்தை 108 முறை உச்சாடனம் செய்ய சொல்ல வேண்டும்.

ஹரி ஓம் சாமுண்டி தேவாய நம
ஹரி ஓம் சிவசக்தி நம
ஹரி ஓம் சிவாய நம நம
ஹரி ஓம் ரோசாளி நம
ஹரி ஓம் ரூத்ர தேவாய நம
ஹரி ஓம் பிடாரி பைரவி நம
ஹரி ஓம் சர்வ தோஷகாரி நம

பின்பு அகல் விளக்கில் தேங்காயையும், எலுமிச்சம் பழத்தையும் மூன்று சுற்று சுற்றி பின் சூறையிட வேண்டும்.

மண்ணிற்குள் புதைத்து வைத்திருக்கும் யந்திரத்தை எடுத்து மஞ்சளி நீரில் கழுவி பிறகு பசும் பாலில் கழுவி தகட்டை அந்த பெண்ணின் கையில் கொடுத்து வீட்டுக்கு அழைத்து வர வேண்டும்.

அந்த யந்திரத்தை சிறு தாமிர தகட்டில் அடக்கி மாங்கல்ய சரட்டில் கோர்த்து விட வேண்டும்.

குழந்தை பேறு நிகழ்ச்சி முடிந்த்தும் தாயத்தை அகற்றி கடல் அல்லது ஓடும் நீர் உள்ள ஆற்றில் வீசி விட வேண்டும்.

Posted by ஹைஷ்126 Saturday, December 5, 2009 2 comments



புனர்பூச நட்சத்திரத்தில் ருதுவான பெண் முதல் மூன்று பாதங்கள் மட்டும்: தன் கணவன் வீட்டில் தானே முதன்மையானவளாக இருப்பாள். மாமனார், மாமியாருக்கு பிடித்தவளாகவும் இருப்பாள். இவளாள் அவள் கணவருக்கு பொருள் வருவாய் உண்டாகும். இவள் தன் கணவனுக்கு விசுவாசமாகவும், சமய நெறியுணர்வு மிகுந்தவளாகவும் இருப்பாள். வெண்மையான பொருட்களில் அதிக விருப்பம் உள்ளவளாக இருப்பாள். அவளால் அவள் புகுந்த வீட்டிற்கே சிறப்பு உண்டாகும். ஆனால் பிறந்த வீடு நலிவடையும். பல குழந்தைகள் பிறந்து மகிழும் வாய்ப்பு உண்டாகும், என்றாலும் புத்திர தோஷம் உண்டு. (பரிகாரம் செய்வது நல்லது)

Posted by ஹைஷ்126 0 comments

எண்ணம் எழும் இடமோ ஒரு புள்ளியாகும்.
அது இயங்கி முடியும் அளவோ அகண்டாகாரம்.

Posted by ஹைஷ்126 0 comments





இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை
யென்றுநீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச்
சுகமதை தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து
பழவினை ஓட்டிடுவாய்
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி

இதை தினமும் காலை குளித்தவுடன் 3 முறையும், இரவில் படுக்கும் முன் மூன்று முறையும் சொன்னால் போதுமானது. இது துர்கை சித்தர் தீட்சையின் எனக்கருளிய மந்திரங்களில் ஒன்று.

***அன்பு சகோதரி ஒருவர் மிகவும் சங்கடப்பட்டுக் கொண்டு இதை எனக்கு மெயில் அனுப்பினார். “கற்றது கையளவு கல்லாதது உலகளவு” என்பது முது மொழி. நான் இதுவரை மறைபொருளிலில் கற்றது A,B,C,D மட்டும்தான் இன்னும் வார்த்தைகள் கூட கற்கவில்லை. அது போல் நான் தீட்சை பெறும் போது எனக்கு கொடுத்ததே போதுமானதாக இருந்தது. ஒரு மருந்தை கொடுக்கும் போது உ.ம்: குழந்தைக்கு 50 mg, 10 வயதுக்கு மேல் 100mg, பெரியவருக்கு 250 mg என்பது போலதான் இதுவும். துக்க நிவாரண அஷ்டகம் முழுவதும் .... "மங்கள ரூபிணி மதி அணி சூலினி மன்மத பாணியளே சங்கடம் நீங்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே கங்கண பாணியன் களிமுகம் கொண்டநல் கற்பகக் காமினியே ஜெயஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி. கான் உறுமலர் எனக் கதிர் ஒளிகாட்டிக் காத்திட வந்திடுவாள் தான் உறு தவஒளி தார்ஒளி மதிஒளி தாங்கியே வீசிடுவாள் மான் ஊறு லிழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள் ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி. சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே எம்குலம் தழைத்திட எழில்வடிவுடனே எழுந்தநல் துர்க்கையளே ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி. தணதண தந்தண தவில் ஒலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய் கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய் பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய் ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே கொஞ்சிடும் குமரனைக் குணம்மிகு வேழனைக் கொடுத்த நல்குமரியளே சங்கடம் தீர்த்திடச் சமர் அது செய்தநல் சக்தி எனும் மாயே ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி. எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம்குல தேவியளே பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய் கண்ணொளி அதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய் சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுபாய் படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய் ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி. ஜெயஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீ பரமேஸ்வரி ஜெய ஜெயஸ்ரீதேவி ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெயஸ்ரீதேவி ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி" அனைவரும் நன்மையடைய வேண்டும், அதே நேரத்தில் என்னை குறைகூற கூடாது என மெயில் இதை அனுப்பிய சகோதரியின் சேவை வாழ்க வளமுடன்.

Posted by ஹைஷ்126 Friday, December 4, 2009 8 comments

Subscribe here